கொலை வழக்கில் அதிமுக பிரமுகர் உள்பட 3 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவையில் ஓய்வு பெற்ற எலக்ட்ரீசியன் கொலை தொடர்பாக அதிமுக பிரமுகர் உள்பட 3 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

கோவை ஜெகந்நாதர் வீதியைச் சேர்ந்தவர் வேணுகோபால் (61). இவர் வருமான வரித் துறையில்எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வந்தார். வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், சில தனியார்களுக்குதன்னால் இயன்ற வேலைகளைச் செய்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வேணுகோபாலை நள்ளிரவில் சிலர் வந்து மோட்டாரை சரி செய்து தரும்படிவற்புறுத்தி அழைத்துள்ளனர். அவர்களுடன் சென்ற வேணுகோபால் வீடு திரும்பவில்லை.

அவரது குடும்பத்தினர் அவரைப் பல இடங்களில் தேடிப் பார்த்தனர். அப்போது புலியகுளம் அருகே உள்ளஹவுசிங் யூனிட்டில் அவரது உடல் கண்டு பிடிக்கப்பட்டது.

இக்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால் எவ்விததடயமும் கிடைக்காமல் தடுமாறினர். தொடர்ந்து கொலை சம்பவத்தில் மர்மமே நீடித்து வந்தது.

இந்நிலையில் கொலையில் தொடர்புடையதாக போலீசார் சந்தேகப்பட்ட வெங்கடேஷ் என்பவர் திருப்பூர்நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

மேலும் அவரிடம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, கிச்சான், சுந்தரமூர்த்தி ஆகியோரும்கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் அதிமுக பிரமுகர் வெங்கடேஷின் தலைமையில் கூலிப் படையாகசெயல்பட்டு வந்துள்ளனர் என தெரிய வந்துள்ளது.

கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+