சென்னையில் மழை வேண்டி இன்று யாகம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் மழை வேண்டி திருவல்லிக்கணிே பார்த்தசாரதி கோவிலில் வியாழக்கிழமை யாகம் நடத்தப்படவுள்ளது.
சென்னையில் கடும் குடிநீர்ப் பஞ்சம் நிலவி வருகிறது. ரயில் மூலம் குடிநீர் கொண்டு வந்து விநியோகிக்கப்படும் நிலைஉருவாகியுள்ளது. இன்னும் கொளுத்தி வரும் வெயிலில் காலிக் குடங்களுடன் தண்ணீருக்காக சாலைகள், தெருக்களில் மக்கள்காத்துக் கிடக்கிறார்கள்.
இந்த நிலையில், சென்னை நகரில் மழை பெய்ய வேண்டி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் யாகம் நடத்தப்படவுள்ளது.அதிமுக சார்பில் வியாழக்கிழமை நடக்கும் இந்த யாகத்தில் அமைச்சர்கள் ஜெயக்குமார், பி.சி.ராமசாமி, தளவாய் சுந்தரம்,பன்னீர் செல்வம், சண்முகம் மற்றும் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்கின்றனர்.
காலை 8 மணிக்குத் தொடங்கும் யாகத்தைத் தொடர்ந்து அன்னதானம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications