ரங்கநாதன் காவல் 15 நாள் நீட்டிப்பு
சென்னை:
புரசைவாக்கம் எம்.எல்.ஏ. ரங்கநாதனுக்கு மேலும் 15 காவல் நீட்டிப்பு செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ரெங்கநாதன் மீது ஆட்கடத்தல், கொலை மிரட்டல், பணம்பறித்தல் உள்ளிட்ட 6 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
முன்னாள் நீதிபதியின் மகனும், தொழிலதிபருமான ரத்தினவேலுவை பணம் கேட்டு மிரட்டியதாக முதலில் அவர் மீதுவழக்கு தொடரப்பட்டது. அதன் பின் ரங்கநாதனால் பாதிக்கப்பட்ட மேலும் 5 பேர் போலீசில் புகார் செய்தனர்.
பெரம்பூரைச் சேர்ந்த உஷாராணி என்பவரும் நிலம் வாங்குவது தொடர்பாக ரங்கநாதன் மீது வழக்கு தொடர்ந்தார்
இந்த வழக்குகள் தொடர்பாக ரங்கநாதனும் அவரது கூட்டாளிகளும் சென்னை மத்திய சிறையில்அடைக்கப்பட்டுள்னர்.
ரத்தினவேலுவை மிரட்டியது தொடர்பான வழக்கு மற்றும் உஷாராணி தொடர்ந்த வழக்கு ஆகியவற்றின்விசாரணைக்காக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் புதன்கிழமை ரங்கநாதன் ஆஜர்படுத்தப்பட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ரத்தினவேலுவை மிரட்டிய வழக்கில் ரங்கநாதனுக்கு மேலும் 15 நாட்கள் காவல்நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications