சீக்கிய பிரிவினைவாத தலைவர் கைது
டெல்லி:
சீக்கிய பிரிவினைவாத இயக்க தலைவர் ஜாகித் சிங் சவுஹான் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக லண்டனில் வாழ்ந்து வந்த சீக்கிய பிரிவினைவாத இயக்க தலைவரான சவுஹான் (70)புதன்கிழமை இந்தியா திரும்பி வந்தபோது, டெல்லி விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டுவிசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார் என உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சவுஹான் பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் நிதியமைச்சரவாக இருந்தவர். சீக்கியர்களுக்கு தனி நாடு (காலிஸ்தான்)வேண்டும் என போராடி வந்த தலைவர்களில் இவர் முக்கியமானவர். மேலும், பஞ்சாப் போலீஸாராலும் இவர்தேடப்பட்டு வந்தார்.
ஹரியானா உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு சவுஹான் செய்திருந்த மனு நிராகரிக்கப்பட்டது. மீண்டும்அவர் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனு இந்த மாதம் 13ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது
இதையடுத்து சவுஹான் இந்தியா வந்ததும் கைது செய்யப்பட்டார்.
சவுஹான் கூறுகையில், நான் தனி காலிஸ்தான் மாநிலம் அமைத்துள்ளதாகவும், காலிஸ்தான் "தூதரக"த்தையும்வெளிநாடுகளில் அமைத்துள்ளதாகவும் இந்திய அரசு புகார் கூறியுள்ளது. மேலும், காலிஸ்தான் பாஸ்போர்ட்டுகள்கொடுத்து வருவதாகவும் என் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், நான் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல்செய்திருந்தேன் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.