பொன்முடியுடன் சென்றதால் சன் டிவி நிருபர் கைது
சென்னை:
விழுப்புரம் அரசு தானியக் கிட்டங்கிக்கு முன்னாள் அமைச்சர் பொன்முடியுடன் சென்ற சன் டிவி நிருபர் சுரேஷ் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
26ம் தேதி முன்னாள் அமைச்சர் பொன்முடி, விழுப்புரத்தில் அரிசி இருப்பு வைக்கப்பட்டிருந்த கிட்டங்கிக்குசோதனை செய்வதற்காகச் சென்றார்.
அவருடன் விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்களும் சென்றிருந்தனர். அங்கு இருப்பில் வைக்கப்பட்டிருந்த அரிசிஎதுவுமே புழுத்த அரிசி இல்லை என்று செய்தியாளர்களுக்கு பொன்முடி எடுத்துக் காட்டினார்.
இந்த சம்பவத்தையடுத்து, அத்துமீறி கிட்டங்கிக்குள் பொன்முடி நுழைந்தார் என்று கூறி அவர் கைதுசெய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, சன் டிவி நிருபர் சுரேஷ் கைது புதன்கிழமை செய்யப்பட்டார்.
இதுகுறித்து, சன் டிவி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொன்முடியுடன் பிற பத்திரிகைகளின்செய்தியாளர்களும் சென்றிருந்தார்கள். ஆனால் சன் டிவி நிருபரை மட்டும் கைது செய்துள்ளனர். அவர் மீதுகொலை மிரட்டல் உள்ளிட்ட பயங்கரமான குற்றப் பிரிவுகளின் கீழ் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்றுகூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த நடவடிக்கையை சன் டிவி நிர்வாகம் சட்டப்படி சந்திக்கும். சுரேஷ் கைது தொடர்பாக பிரதமர்,உள்துறை அமைச்சர், மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர், இந்திய பத்திரிக்கை கவுன்சில், மனிதஉரிமை கவுன்சில் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு சொல்லப்படும் என்றும் அந்தச் செய்திக் குறிப்பில்கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications