இந்திய டாக்டர்களுக்கு பிஜியில் மவுசு
சுவா:
பிஜியில் கடந்த வருடம் புரட்சி நடந்ததையடுத்து அங்கு டாக்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால்இந்தியாவிலிருந்தும், பிலிப்பைன்சிலிருந்தும் டாக்டர்களை தேர்வு செய்ய தயாராகி வருகிறது பிஜி.
கடந்த 2000ம் ஆண்டு மே மாதம் ஜார்ஜ் ஸ்பைட் தலைமையிலான கலவரக்காரர்கள், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரதமர்மஹேந்திர சவுத்ரியையும், அவரது அமைச்சரவை சகாக்களையும் சிறைவைத்தனர்.
இதையடுத்து அங்கு பெரும் கலவரம் வெடித்தது. பின்னர் ராணுவத்துக்கும், கலகக்கும்பலுக்கும் இடையே நடந்தபேச்சுவார்த்தையின் அடிப்படையில் மஹேந்திர சவுத்ரி விடுவிக்கப்பட்டார்.
பிஜியில் கலவரம் நடந்த போது 32 டாக்டர்கள் உயிரிழந்தனர். இதனால் இந்தியா மற்றும் பிலிப்பைன்சிலிருந்து டாக்டர்களைத்தேர்வு செய்ய பிஜி டாக்டர்கள் சங்கம் திட்டமிட்டுள்ளது.
டாக்டர் நாகநீலி கோன்யாலி இந்தியாவிலிருந்து 6 டாக்டர்களையும், பிலிப்பைன்சிலிருந்து 56 டாக்டர்களையும் தேர்வு செய்யஉள்ளதாகத் தெரிவித்தார்.
அறுவைசிகிச்சை உள்பட மருத்துவத்தின் பல்வேறு துறைகளில் இந்திய டாக்டர்கள் கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
பிஜியில் உள்ள முக்கிய நகரங்களான சுவா, லம்பாஸா மற்றும் லாக்டோகாவில் இந்திய டாக்டர்கள் அதிக அளவில் பணிபுரிந்துவருகிறார்கள். இதனால் இந்திய டாக்டர்களுக்கு பிஜியில் மவுசு அதிகரித்துள்ளது.
மேலும் பிஜியில் டாக்டர்கள் பற்றாக்குறை ஏற்படுவதற்கு ஆஸ்திரேலியாவும் முக்கியக் காரணம் வகிப்பதாக பிஜிகுற்றம்சாட்டியுள்ளது.
பிஜி டாக்டர்கள் மற்றும் மருத்துவத்துறையில் பல பரிவுகளில் பணிபுரிவோரை ஆஸ்திரேலியா தேர்வு செய்து தங்கள் நாட்டுக்குசேவை செய்யப் பயன்படுத்திக் கொள்கிறது என்றும் பிஜி குற்றம்சாட்டியுள்ளது.
மேலும் பிஜியில் பணிபுரிந்து வந்த இந்திய டாக்டர்கள் அங்கு நடந்த கலவரத்துக்குப் பிறகு அங்கிருந்து வேறு நாடுகளுக்குச்சென்று விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications