இந்திய டாக்டர்களுக்கு பிஜியில் மவுசு

Subscribe to Oneindia Tamil

சுவா:

பிஜியில் கடந்த வருடம் புரட்சி நடந்ததையடுத்து அங்கு டாக்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால்இந்தியாவிலிருந்தும், பிலிப்பைன்சிலிருந்தும் டாக்டர்களை தேர்வு செய்ய தயாராகி வருகிறது பிஜி.

கடந்த 2000ம் ஆண்டு மே மாதம் ஜார்ஜ் ஸ்பைட் தலைமையிலான கலவரக்காரர்கள், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரதமர்மஹேந்திர சவுத்ரியையும், அவரது அமைச்சரவை சகாக்களையும் சிறைவைத்தனர்.

இதையடுத்து அங்கு பெரும் கலவரம் வெடித்தது. பின்னர் ராணுவத்துக்கும், கலகக்கும்பலுக்கும் இடையே நடந்தபேச்சுவார்த்தையின் அடிப்படையில் மஹேந்திர சவுத்ரி விடுவிக்கப்பட்டார்.

பிஜியில் கலவரம் நடந்த போது 32 டாக்டர்கள் உயிரிழந்தனர். இதனால் இந்தியா மற்றும் பிலிப்பைன்சிலிருந்து டாக்டர்களைத்தேர்வு செய்ய பிஜி டாக்டர்கள் சங்கம் திட்டமிட்டுள்ளது.

டாக்டர் நாகநீலி கோன்யாலி இந்தியாவிலிருந்து 6 டாக்டர்களையும், பிலிப்பைன்சிலிருந்து 56 டாக்டர்களையும் தேர்வு செய்யஉள்ளதாகத் தெரிவித்தார்.

அறுவைசிகிச்சை உள்பட மருத்துவத்தின் பல்வேறு துறைகளில் இந்திய டாக்டர்கள் கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

பிஜியில் உள்ள முக்கிய நகரங்களான சுவா, லம்பாஸா மற்றும் லாக்டோகாவில் இந்திய டாக்டர்கள் அதிக அளவில் பணிபுரிந்துவருகிறார்கள். இதனால் இந்திய டாக்டர்களுக்கு பிஜியில் மவுசு அதிகரித்துள்ளது.

மேலும் பிஜியில் டாக்டர்கள் பற்றாக்குறை ஏற்படுவதற்கு ஆஸ்திரேலியாவும் முக்கியக் காரணம் வகிப்பதாக பிஜிகுற்றம்சாட்டியுள்ளது.

பிஜி டாக்டர்கள் மற்றும் மருத்துவத்துறையில் பல பரிவுகளில் பணிபுரிவோரை ஆஸ்திரேலியா தேர்வு செய்து தங்கள் நாட்டுக்குசேவை செய்யப் பயன்படுத்திக் கொள்கிறது என்றும் பிஜி குற்றம்சாட்டியுள்ளது.

மேலும் பிஜியில் பணிபுரிந்து வந்த இந்திய டாக்டர்கள் அங்கு நடந்த கலவரத்துக்குப் பிறகு அங்கிருந்து வேறு நாடுகளுக்குச்சென்று விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+