பெங்களூரிலும் பாதுகாப்பு அதிகரிப்பு
பெங்களூர்:
தி.மு.க. தலைவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளதையடுத்து பெங்களூரில் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் பாலங்கள் கட்டியதில் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு தி.மு.க. தலைவர் கருணாநிதி வெள்ளிக்கிழமைநள்ளிரவு அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து பெங்களூரில் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து பெங்களூர் போலீஸ் கமிஷனர் மடியால்செய்தியாளர்களிடம் கூறுகையில், சென்னையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டுள்ளதையடுத்து பெங்களூரில்காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது.
நாங்கள் நிலைமையை தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம். நண்பகல் வரை பெங்களூரில் எந்த விதமானஅசம்பாவித சம்பவமும் நடந்தததாக எந்த விதமான தகவலும் வரவவில்லை. முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக யாரும் கைதுசெய்யப்படவில்லை.
தமிழக பத்திரிக்கை அலுவலகங்களுக்கும், கருணாநிதியின் உறவினர்களால் நடத்தப்பட்டு வரும் கன்னட தனியார்தொலைக்காட்சியான உதயா டிவிக்கும் சிறப்பு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
யு.என்.ஐ.