கருணாநிதி முரண்டுபிடித்தார்: போலீஸார்
சென்னை:
கைது செய்யப்படும்போது கருணாநிதி முரண்டு பிடித்ததால்தான் அவரை இழுத்துச் சென்றோம் என்று போலீஸார்தெரிவித்துள்ளனர்.
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டது, 1996 ம் ஆண்டு ஜெயலலிதா கைது செய்யப்பட்டதற்குபழிவாங்கும் வகையில் அமைந்துள்ளது.
தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஒன்றரை மாதத்திலேயே, அதிமுக அரசு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ்கருணாநிதியைக் கைது செய்ய உத்தரவிட்டுள்ளது. சென்னை நகரில் 10 பாலங்கள் கட்டியதில் ஊழல் நடந்துள்ளதாக கருணாநிதிமேல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதே ரீதியில்தான் 1996 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 7 ம் தேதி ஜெயலலிதா ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.தற்போது ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் அதே ரீதியில் கருணாநிதி கைது செய்யப்பட்டுள்ளார்.
கருணாநிதி மேல் சென்னை நகரில் பாலம் கட்டியதில் ரூ 12 கோடி ஊழல் புரிந்துள்ளதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.அவர் தற்போது சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் ஜெயலலிதா கைது செய்யப்பட்டபோது அவர் 14 நாட்கள் காவலில் வைக்கப்பட்டிருந்தார். அதே போல்கருணாநிதியை 14 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் 28 நாட்கள் சிறை வாழ்க்கையின்போது அவருக்கு அலுமினியப் பாத்திரத்தில் உணவு வழங்கப்பட்டதுநினைவிருக்கலாம்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications