For Daily Alerts
Just In
கருணாநிதி கைது: முதியவர் தீக்குளிப்பு
உடுமலை:
கருணாநிதியைக் கைது செய்யப்படுவதை டிவியில் கண்ட முதிய திமுக தொண்டர் தீக்குளித்தார். அவர் உயிருக்கு ஆபத்தானநிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
உடுமலை பழனியாண்டவர் மில் அருகே குடும்பத்துடன் வசித்து வருபவர் குமரன் (65). இவர் கடந்த 33 ஆண்டுகளாக திமுகவில்இருந்து வருகிறார்.
திமுக தலைவர் கருணாநிதி வெள்ளிக்கிழமை நள்ளிரவில் கைது செய்யப்பட்டதை டி.வியில் பார்த்த இவர் மிகவும்சோகமடைந்தார்.
வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்துக் கொண்டு ரோட்டுக்கு ஓடினார். அங்கு தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றித் தீவைத்துக் கொண்டார். உடலில் தீப்பற்றிக் கொண்டு அலறினார்.
அருகில் இருந்த சிலர் அவரை உடனே மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Comments
Story first published: Saturday, June 30, 2001, 5:30 [IST]