For Daily Alerts
Just In
திமுகவினர் போராட்டம்: விழுப்புரத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூடு
சென்னை:
கருணாநிதி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் சாலை மறியலிலும்ஆர்ப்பாட்டத்திலும் இறங்கியுள்ளனர்.
இதையொட்டி, தமிழகம் முழுவதும் ஸ்தம்பித்துப் போனது. கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சாலைகளில்பேருந்துகள் ஓடவில்லை.
கருணாநிதி கைது செய்யப்பட்டதை எதிர்த்து, விழுப்புரத்தில் உள்ள திமுக தொண்டர்கள் கடுமையானஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, போலீஸார் வானை நோக்கி துப்பாக்கியால்சுட்டனர்.
அங்கு மறியலில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை புறநகர் பகுதியான கொரட்டூர் அருகே பட்டரவாக்கத்தில் உள்ள ரயில்வே ரிசர்வேஷன் கவுண்டர்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.
இவை தவிர, தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் கல்வீச்சில் சேதமடைந்தன.
Comments
Story first published: Saturday, June 30, 2001, 5:30 [IST]