இன்று மாலை மீண்டும் கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்: ஜனாதிபதி ஆட்சி அமலாக்கப்படுமா?
டெல்லி:
தி.மு.க. தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டதால், தமிழகத்தில் நிலவி வரும் சூழ்நிலை குறித்து விவாதிக்க மத்தியஅமைச்சரவை திங்கள்கிழமை மாலை 6.30 மணிக்கு கூட உள்ளது.
இந்த கூட்டத்தில் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 355வது பிரிவு அல்லது இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 356வதுபிரிவை தமிழ்நாட்டில் அமல்படுத்தவது குறித்து விவாதிக்கப்படும்.
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 355வது பிரிவு அமல்படுத்தப்பட்டால் அதன்படி கைது செய்யப்பட்டுள்ள மத்தியஅமைச்சர்கள் முரசொலி மாறனும், டி.ஆர். பாலுவும் விடுதலை செய்ய அது வழிவகுக்கும்.
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 356வது பிரிவு அமல்படுத்தப்பட்டால், தமிழகத்தில் ஆட்சி கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சிவர அது வழி வகுக்கும்.
இந்த கூட்டம் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் நடைபெறும். இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சகம் சார்பாக தமிழகம், மத்தியசிறப்பு உள்துறை செயலாளர் தலைமையில் சென்று வந்த குழுவினர் சமர்பிக்கும் அறிக்கை குறித்து விவாதிக்கும.
மேலும் ஞாயிற்றுக்கிழமை பிரதமர் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது விவாதிக்கப்படாத தமிழகவிஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்படும்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications