பந்த் தோல்வி என்கிறது போலீஸ்
சென்னை:
தமிழகத்தில் திங்கள்கிழமை நடந்த பந்த் தோல்வியடைந்து விட்டது என்கிறார் தமிழகப் போலீஸ் டி.ஜி.பியான ஏ.ரவீந்திரநாத்.
முன்னாள் தமிழக முதல்வர் கைது செய்யப்பட்டதை எதிர்த்தும், மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன் மற்றும்டி.ஆர். பாலு ஆகியோர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், தமிழக தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியினர்திங்கள்கிழமை பந்த்திற்கு அழைப்பு விடுத்தனர்.
இதையடுத்து, திங்கள்கிழமை காலை 6 மணிக்கு ஆரம்பித்த பந்த் மாலை 6 மணிக்கு முடிந்தது.
இதுகுறித்து, டி.ஜி.பி. மேலும் கூறியதாவது:
தமிழகத்தில் நடந்த பந்த் தோல்வியடைந்து விட்டது. தமிழகம் முழுவதும் இந்த பந்த் அமைதியாக நடப்பதற்குமக்கள்தான் பெருமளவு உதவி புரிந்துள்ளனர். அதனால் அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மாநிலத்தில் சில இடங்களில் மட்டுமே வன்முறை நடந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் பெரும்பாலான இடங்களில்கடைகளும் வர்த்தக நிறுவனங்களும் திறந்திருந்தன. சில பள்ளி, கல்லூரிகள் திறந்திருந்தன என்றும் தகவல்கள்வந்துள்ளன.
போலீஸ் பாதுகாப்புடன் அரசு பஸ்கள் ஓடின என்றாலும், தமிழகம் முழுவதும் 145 பஸ்கள் அடித்துநொறுக்கப்பட்டன என்று கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் வன்முறையில் ஈடுபடுவதற்கு முயன்ற 4,000 பேர்கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார் டி.ஜி.பி. ரவீந்திரநாத்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications