மதுரையில் 3 பஸ்கள் உடைப்பு
மதுரை:
திங்கள்கிழமை தமிழகத்தில் நடந்து வரும் முழு அடைப்பின்போது ஏற்பட்ட வன்முறையில் மதுரையில் 3 பஸ்கள் உடைக்கப்பட்டுசேதமடைந்தன.
முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தில் திமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக்கூட்டணி முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதையொட்டி, தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் அசம்பாவிதச் சம்பவங்கள் எதுவும் நடைபெறாத வகையில், போலீஸார்குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மதுரையில் 3 பஸ்கள் அடித்து உடைக்கப்பட்டன. இங்கு வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடியே உள்ளன.சாலைகள் பஸ் போக்குவரத்தின்றி வெறிச்சோடிக் கிடக்கின்றன. கடைகள் மூடப்பட்டுள்ளன.
ஆங்காங்கே ஒரு சில அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயங்குகின்றன. அரசு அலுவலகங்கள் திறந்திருந்தும், ஒரு சிலர்மட்டுமே பணிக்கு வந்திருந்தனர்.
வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக, மதுரையில் இதுவரை 7 திமுக தொண்டர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications