ராஜ்பவனைக் காலி செய்தார் பாத்திமா பீவி
சென்னை:
தமிழக ஆளுநர் பாத்திமாபீவியின் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் ஏற்றுக் கொண்டதையடுத்து,திங்கள்கிழமை அதிகாலை ராஜ்பவனைக் காலி செய்தார் பாத்திமாபீவி.
பாத்திமா பீவி டெல்லிக்குச் சென்றாரா அல்லது கேரளாவுக்குச் சென்றாரா என்று தெரியவில்லை.
பாத்திமா பீவி பதவிநீக்கம் செய்யப்பட்டதையடுத்து, ஆந்திரப் பிரதேச ஆளுநர் டாக்டர் சி.ரங்கராஜன் தமிழக ஆளுநராகபொறுப்பேற்கவுள்ளார். அவர் திங்கள்கிழமை மாலை தமிழக ஆளுநராகப் பொறுப்பேற்பார் என்று தெரிகிறது.
முன்னதாக, முன்னாள் முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன் மற்றும் டி.ஆர்.பாலு ஆகியோர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் குறித்து நடுநிலையான, சுயமான அறிக்கையை மத்திய அரக்கு அனுப்பி வைக்கவில்லை என்றகாரணத்தால் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பாத்திமா பீவியைத் திரும்ப அழைப்பதற்குமுடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனுக்கு அனுப்பி வைத்தார் பாத்திமா பீவி.
இந்நிலையில், பாத்திமா பீவி திங்கள்கிழமை காலை ராஜ்பவனைக் காலி செய்தார்.
யு.என்.ஐ.