பந்த் அமைதியாக நடக்கிறது: டி.ஜி.பி.
சென்னை:
தமிழகத்தில் திங்கள்கிழமை முழு அடைப்பு அமைதியாக நடந்து வருகிறது என்று தமிழக டி.ஜி.பியான ஏ. ரவீந்திரநாத் கூறினார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டதை எதிர்க்கும் விதமாகவும், அவரையும், கைது செய்யப்பட்ட மத்திய அமைச்சர்கள்மாறன் மற்றும் டி.ஆர். பாலுவையும் விடுதலை செய்யக் கோரி தமிழகம் முழுவதும் பந்த் நடத்துவதற்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணிஅழைப்பு விடுத்தது.
இதையடுத்து, திங்கள்கிழமை காலை 6 மணிக்கு பந்த் தொடங்கியது. இதுகுறித்து, தமிழக போலீஸ் டி.ஜி.பி. ரவீந்திரநாத் நிருபர்களுக்குஅளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் பந்த் மிக அமைதியாகவே நடந்து வருகிறது. எனினும், ஆங்காங்கே சில இடங்களில்வன்முறைகளும் கல்வீச்சுச் சம்பவங்களும் நடந்ததாகக் கூறப்படுகிறது.
இவை தவிர, வேறு குறிப்பிடத்தக்க வன்முறைச் சம்பவங்கள் நடந்ததாக இதுவரை தகவல்கள் இல்லை. தமிழகம் முழுவதும் நிலைமைகட்டுக்குள் இருக்கிறது என்றார் ரவீந்திரநாத்.












Click it and Unblock the Notifications