உள்துறை அதிகாரிகள் குழு அறிக்கை சமர்ப்பிப்பு
டெல்லி:
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டது முதல் நடந்த சம்பவங்கள் குறித்த இறுதி அறிக்கையை, மத்திய உள்துறைசிறப்புச் செயலாளர் கவுஷல் தலைமையிலான நால்வர் குழு திங்கள்கிழமை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கும் என்று தெரிகிறது.
தமிழகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன் மற்றும் டி.ஆர்.பாலு ஆகியோர் கைது செய்யப்பட்டதுகுறித்து உண்மையான தகவல்களை அறிவதற்காக உள்துறை சிறப்புச் செயலாளர் கவுஷல் தலைமையிலான ஒரு குழுவை மத்திய உள்துறைஅமைச்சர் அத்வானி தமிழகத்துக்கு அனுப்பி வைத்தார்.
அந்தக் குழு ஞாயிற்றுக்கிழமை காலை சென்னை வந்து, அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று முரசொலி மாறனைச் சந்தித்தது. பின்னர்வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாலுவையும் சந்தித்தது.
பின்னர் ஞாயிற்றுக்கிழமை இரவே இக்குழு டெல்லி திரும்பிவிட்டது. அந்தக் குழு, உள்துறை செயலாளர் கமல் பாண்டேவிடம்ஞாயிற்றுக்கிழமை இரவு தமிழக நிலைமை குறித்த அறிக்கையை சமர்ப்பித்து விட்டது.
தற்போது துருக்கியில் உள்ள அத்வானியின் ஒப்புதல் கிடைத்த பின், இந்த அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும்.
இந்நிலையில், தமிழக நிலைமை குறித்து விவாதிப்பதற்காக மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை வாஜ்பாய் தலைமையில் டெல்லியில்கூடுகிறது என்பதும், தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியைப் அமல்படுத்தலாம் என்று ஜார்ஜ் பெர்னாண்டஸ் மத்திய அரசுக்குப் பரிந்துரைசெய்துள்ளார் என்பதும் நினைவிருக்கலாம்.
யு.என்.ஐ.