மத்திய அரசுடன் சண்டைபோட விரும்பவில்லை: ஜெயலலிதா
சென்னை:
மத்திய அரசுடன் நல்லுறவைப் பேணுவதற்காகவே அமைச்சர்கள் முரசொலி மாறன், டி.ஆர். பாலு ஆகியோரைவிடுவிக்கப்பட்டனர் என முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாறனும், பாலுவும் போலீசாருடன் மிக முரட்டுத்தனமாகநடந்து கொண்டனர். அவர்களை கடமையைச் ச்ெயய விடாமல் தடுத்தனர்.
போலீசாரைத் தாக்கினர். இதனால் தான் அவர்களைக் கைது செய்தோம்.
இருந்தாலும் மத்திய அரசுடன் நல்லுறவைப் பேணுவதற்காகவும் மத்திய-மாநில அரசுகளுடன் அமைதியானஉறவைப் பேணவும் தான் இருவரையும் விடுதலை செய்துள்ளோம். தவறாகவே நடந்திருந்தாலும் கூட அவர்கள்மீதான வழக்குகளை வாபஸ் பெற்றுள்ளோம்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
டெல்லியில் நிருபர்களுடன் பேசிய தமிழக அமைச்சர் பொன்னையன் கூறுகையில், பிரதமர் அலுவலகத்தில் இருந்துஇரு அமைச்சர்களையும் விடுவிக்கச் சொல்லி உத்தரவு வந்தது. இந்த உத்தரவு எழுத்துப் பூர்வமாக வரவில்லை.ஆனால், அதிகாரப்பூர்வமில்லாத வகையில் வாய்மொழியாக இந்த உத்தரவு வந்தது.
இதையடுத்து மத்திய அரசுடன் மோதல் போக்கை கைவிட வேண்டாம் என்ற நோக்கத்துடன் தான் மாறனையும்,பாலுவையும் விடுவித்தோம் என்றார்.
டெல்லியில் பேசிய அமைச்சர் தம்பிதுரை, தவறு செய்த மத்திய அமைச்சர்கள் விடுதலையானதற்கு முதல்வர்ஜெயலலிதாவின் பெருந்தன்மை தான் காரணம் என்றார்.












Click it and Unblock the Notifications