திமுக தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்: ஜெ. குற்றச்சாட்டு
சென்னை:
திங்கள்கிழமை நடந்த பந்த்தின்போது, திமுக தொண்டர்கள் பல்வேறு வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டனர் என்றுமுதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் திமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியினர் திங்கள்கிழமை முழு அடைப்புப்போராட்டம் நடத்தினர்.
அப்போது பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்களைத் தூண்டிவிடும் வகையில் நடந்து திமுகவினர்கொண்டனர். சில இடங்களில் சாலை மறியல், பஸ்களுக்குக் கல்வீச்சு போன்ற வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.இது கண்டிக்கத்தக்கது.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் கிழக்குக் காலனியைச் சேர்ந்த ரத்தினம் என்ற அதிமுக தொண்டர் கல்வீச்சுசம்பவத்தில் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார்.
மாநிலத்தில் முழு அடைப்பு நடக்கும்போது வன்முறைச் சம்பவங்களில் யாரும் ஈடுபடக்கூடாது. ஆனால்,திமுகவினர் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டது, அதிமுகவைச் சேர்ந்த அப்பாவித் தொண்டரின் உயிரைப் பலிவாங்கும்அளவுக்குப் போய்விட்டது.
உயிரிழந்த அதிமுக தொண்டர் குடும்பத்துக்கு தமிழக அரசின் குடும்ப நல நிதியிலிருந்து ரூ.50,000 வழங்கப்படும்என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications