தமிழக தற்காலிக ஆளுநராக ரங்கராஜன் இன்று பதவியேற்பு
ஹைதராபாத்:
ஆந்திர மாநில ஆளுநர் டாக்டர் சி. ரங்கராஜன் செவ்வாய்க்கிழமை தமிழக தற்காலிக கவர்னராகப்பொறுப்பேற்கிறார்.
தமிழக ஆளுநர் பாத்திமா பீவியை திரும்ப பதவி நீக்கம் செய்ய மத்திய அமைச்சரவை முடிவு செய்ததையடுத்து,தனது பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
இதனால் ஆந்திர மாநில ஆளுநர் டாக்டர் ரங்கராஜனை தமிழக கவர்னராக கூடுதல் பொறுப்பேற்கும்படியும் முடிவுசெய்யப்பட்டது.
இதற்கான நியமன உத்தரவு ஜனாதிபதி நாராயணனிடம் இருந்து டாக்டர் ரங்கராஜனுக்கு திங்கள்கிழமைவழங்கப்பட்டது.
இதையடுத்து, செவ்வாய்க்கிழமை காலை 6.15 மணியளவில் விமானம் மூலம் சென்னை வருகிறார் டாக்டர்ரங்கராஜன். பகல் 11 மணிக்கு தமிழக ஆளுநராக டாக்டர் ரங்கராஜன் பொறுப்பேற்பார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி என்.கே.ஜெயின் இவருக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.
இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, தலைமைச் செயலாளர் சங்கர் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.ஆந்திர ஆளுநர் ரங்கராஜன் ஏற்கனவே இரண்டு முறை தமிழக ஆளுநராக கூடுதல் பொறுப்பை வகித்துள்ளார்.












Click it and Unblock the Notifications