மாறப் போகிறது வரலாறு
இந்த வருடம் முதல் பள்ளிப் பாடங்களில் வரலாறு பாடத்திட்டத்தை மாற்றியமைக்க பள்ளி கல்வி இயக்கம்ஆலோசனை நடத்தி வருகிறது. மத்திய பா.ஜ.க. அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
புதிதாக அறிமுகப்படுத்தவுள்ள வரலாறு பாடத்தில் ஆரிய மன்னர்கள் படையெடுப்பு பற்றி எந்தத் தகவல்களும்இடம் பெறாது. அதற்குப் பதிலாக இந்தியத் தலைவர்கள் குறித்த விஷயங்களுக்கு அதிக அளவு முக்கியத்துவம்கொடுக்கப்பட்டிருக்கும்.
இதுகுறித்து தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் இயக்குநர் ஜக்மோகன் சிங் ராஜ்புட் கூறியதாவது:
பள்ளிகளில் 10 ம் வகுப்பு வரை வரலாறு தனிப்பாடமாக இருந்தது வந்தது. இந்த வருடம் முதல் 10 ம் வகுப்பு வரைவரலாறு பாடத்தை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சில முக்கிய வரலாற்றுச் சம்பவங்கள்சமூக அறிவியல் பாடத்துடன் இணைக்கப்படும்.
இப்போது உள்ள வரலாற்றுப் பாடம் மார்க்சிய சிந்தனைகளால் எழுதப்பட்டது. இதை மாற்றி (இந்துத்துவகொள்கை அடிப்படையில் எழுதி) மாணவர்களுக்கு வழங்குவோம்.
புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள வரலாறு பாடத்திட்டத்தில் கடந்த 15 வருடங்களில் நடந்த வரலாற்றுநிகழ்வுகள் கொடுக்கப்பட்டிருக்கும். நமது வரலாற்றுப் பாடத்திட்டங்கள் இதுவரை கற்பனை அடிப்படையில்தொகுக்கப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது மாற்றியமைக்கப்படவுள்ள வரலாற்றுப் பாடத்திட்டம் தேசிய ஒருமைப்பாட்டுக்குப் பெருமைசேர்க்கும் வகையில் இருக்கும். பழைய வரலாற்று முறையிலிருந்து முற்றிலும் இது வேறுபட்டிருக்கும்.தேவையில்லாத உதாரணங்களைக் கொடுத்து பள்ளி மாணவர்களைக் குழப்பும் வகையில் தற்போதைய வரலாற்றுப்பாடம் இருக்காது.
மாணவர்களின் படிப்புச்சுமையைக் குறைக்கும் வகையிலும் வரலாற்றுப் பாடம் இருக்கும். புதிய வகைப்பாடத்திட்டத்தில் புவியியல், பொருளாதாரம், சமூக அறிவியல் ஆகியவை சம அளவில் கொடுக்கப்பட்டிருக்கும்.
1947 ம் ஆண்டுக்குப் பிறகு நடந்த வரலாற்றுச் சம்பவங்களின் கோர்வையாகத்தான் வரலாற்றுப் பாடங்கள்தொகுக்கப்படும்.
பாபர் மசூதி இடிப்புச் சம்பவம்:
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் 1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம், அங்கு ராமர் கோவில்கட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் முயன்று வரும் விஷயம் ஆகியவை வரலாற்றுப் பாடத்தில் இடம்பெறும்.
இருப்பினும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்தை விரிவாகக் கொடுத்து வீண் சர்ச்சையை ஏற்படுத்தவிரும்பவில்லை.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம், ராமர் கோவில் கட்ட நடக்கும் ஏற்பாடுகள் ஆகியவை குறித்து நடுநிலையானபாடத்தைக் கொடுத்து எது சரியென்று பள்ளி மாணவர்களையே தேர்வு செய்ய வைக்கவுள்ளோம்.
புதிய வரலாற்றுப் பாடத்திட்டத்தில் தொல்பொருள் ஆராய்ச்சி தொடர்பான விளக்கங்கள் எதுவுமே இடம்பெறாதுஎன்றார் ஜக்மோகன் சிங்.