விடுதலையை ஏற்பாரா கருணாநிதி?
உங்கள் கைதுக்கு தனிப்பட்ட விரோதம்தான் காரணமா?
நான் என்ன சுதாகரனா?
மத்திய அரசின் நிலை என்ன?
இன்று மாலை நான் விடுதலையாகி வீட்டுக்குச் சென்றதும், முதன் முதலில் பிரதமர் வாஜ்பாயிடம் இருந்துதான்போன் வந்தது. என் உடல்நிலை பற்றி அக்கறையுடன் விசாரித்தார்.
ஆட்சி கவிழ்ந்து விடும் என்ற பயத்தில்தான் உங்களை விடுவித்துள்ளார்களா?
இக்கேள்விக்கான பதிலை, சுறுசுறுப்புக்குப் பெயர் போன உங்களைப் போன்ற பத்திரிக்கையாளர்களின்யூகத்திற்கே விட்டு விடுகிறேன்.
உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்திற்கு பிராயச்சித்தம் என்ன?
இதை எனக்கு மட்டுமே ஏற்பட்டதாகக் கருதக்கூடாது. பொது வாழ்வில் உள்ள ஒருவனுக்கு ஏற்பட்டதாகவே கருதவேண்டும். பொது வாழ்வில் உள்ள ஒருவரை எப்படி நடத்த வேண்டும் என்பது ஒரு முதல்வருக்குத் தெரிந்திருக்கவேண்டும்.
ஜெயலலிதாவைக் கைது செய்யப் போகும் போது, அவர் ஏதோ பூஜையில் இருந்தாராம். அவர் பூஜை முடிந்துவெளியில் வரும்வரை அதிகாரிகள் வெளியேதான் காத்திருந்தார்கள்.
100 கோடி மக்களின் சார்பாகத்தான் நான் தண்டிக்கப் பட்டிருக்கிறேன். இதே நிலை நீடித்தால், எமெர்ஜன்சிவந்தாலும் வந்து விடும். ஆனால் அதை தற்போதுள்ள சூழ்நிலையில் நாடு தாங்காது என்றார் கருணாநிதி.