விடுதலையை ஏற்பாரா கருணாநிதி?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கருணாநிதிக்கு விடுதலை வழங்கப்பட்டாலும் கூட அவர் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட மாட்டாது எனதமிழக அரசு அறிவித்துள்ளது.
ஆனால், நான் ஜாமீன் கோரவும் மாட்டேன் ஜாமீனில் வெளியில் வரவும் மாட்டேன் என ஏற்கனவே கருணாநிதிஅறிவித்துள்ளார். என் மீதான பொய் வழக்குகளை ஜெயிலில் இருந்தவாரே சந்திப்பேன். நான் குற்றவாளி இல்லைஎன்பதை நிரூபித்துவிட்டுத் தான் வெளியில் வருவேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனால், ஜெயலலிதா அரசு தனக்கு அளித்துள்ள விடுதலையை கருணாநிதி ஏற்பாரா எனத் தெரியவில்லை.
திமுக தரப்பில் மிகத் தீவிரமான ஆலோசனைகள் நடந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications