For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம்: தம்பிதுரை

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

கருணாநிதி, மாறன், பாலுவைக் கைது செய்த போலீஸ் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாதுஎன தமிழக கல்வியமைச்சர் தம்பிதுரை திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்ட போது, போலீஸார் அராஜகமான செயலில் ஈடுபட்டதையும்,மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன் மற்றும் டி.ஆர். பாலு ஆகியோரைப் போலீஸார் கைது செய்ததையும்கடுமையாகக் கண்டித்த மத்திய அரசு, தமிழகப் போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றுதமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

ஆனால், போலீஸார் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்று தம்பிதுரை உறுதியாகக்கூறியுள்ளார். இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:

தமிழகப் போலீஸார் தன்னுடைய கடமையைத்தான் செய்துள்ளனர். அப்போது அங்கு மத்திய அமைச்சர் மாறன்வந்த பிறகுதான் பிரச்சனையே ஆரம்பித்தது. போலீஸார் தங்களுடைய கடமையைச் செய்யவிடாமல் அவர்தான்தடுத்துள்ளார்.

சிபிசிஐடி டிஐஜியான முகமது அலியை மாறன்தான் கடுமையாகத் தாக்கியுள்ளார். சன் டி.வி. தவிர மற்ற அனைத்துடி.வி.க்களிலும் காட்டப்பட்ட காட்சிகளைப் பார்த்தாலே இது தெளிவாகத் தெரியும்.

இந்நிலையில் நாங்கள் போலீஸ் மீது நடவடிக்கை எடுப்பதற்கு இப்போதைக்கு வாய்ப்பே இல்லை. மத்திய அரசின்வற்புறுத்தலுக்கு இணங்கி, நாங்கள் போலீஸ் மீது நடவடிக்கை எடுத்தால், அது போலீஸாரின் மன உறுதியைக்குலைக்கும் வகையில் அமைந்துவிடும்.

இதையும் மீறி போலீஸாரின் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி, முதல்வர் ஜெயலலிதா முடிவெடுப்பார் என்றார்தம்பிதுரை.

அரசியல் சட்டம் 355 பாய்வதற்கான அறிகுறி?

அமைச்சர் தம்பிதுரையின் இந்த அறிக்கை, அரசியல் சட்டம் 355வது பிரிவு தமிழகத்தில் பாயப் போவதற்கானஅறிகுறியாகவே தோன்றுகிறது. போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினால், நிச்சயம் அதைத்தமிழக அரசு மறுக்கும் என்பதை நன்கு அறிந்தே மத்திய அரசு இந்த நடவடிக்கைக்கு உத்தரவிட்டது.

அது போலவே, தற்போது தமிழக அமைச்சர் தம்பிதுரை போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்றுஉறுதியாகக் கூறியுள்ளார். எனவே, நிச்சயம் தமிழக அரசின் மீது அரசியல் சட்டத்தின் 355வது பிரிவு பாயும் என்றுதெரிகிறது.

ஆனால், தனது அரசு மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுப்பதைத் தடுக்க கருணாநிதியை விடுவித்துவிடஜெயலலிதா முடிவு செய்திருக்கிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X