கருணாநிதி வீட்டுக்கு போகவேயில்லை: 2 அதிகாரிகள் மறுப்பு
சென்னை:
கருணாநிதியை கைது செய்யச் சென்ற போலீசாருடன் நாங்கள் செல்லவில்லை என இரு உயர் போலீஸ்அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் கருணாநிதியின் ஆலிவர் ரோடு வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் ஐ.ஜி. முகமதுஅலி தலைமையில் உயர் போலீஸ் அதிகாரிகள் இந்த கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இது குறித்து கருணாநிதி வீட்டில் இருந்தவர்கள் கூறுகையில், கீழ்கண்ட அதிகாரிகள் தான் கைது நடவடிக்கையில்ஈடுபட்டனர் என்றனர்.
கருணாநிதி கூட புதன்கிழமை சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் அளித்த பேட்டியில், கீழ்கண்ட அதிகாரிகள்தான் என்னைக் கைது சென்றனர் என்றார்.
அந்த அதிகாரிகள் விவரம்:
1. முகமது அலி - சிபிசிஐடி டிஐஜி
2. முருகேசன்- சென்னை நகர உதவி ஆணையர்
3. கிறிஸ்டோபர் நெல்சன்
4. சாரங்கன்
5. சண்முக ராஜேந்திரன்
6. ஜார்ஜ்
7. சந்தீப்
ஆனால், இதில் கிருஸ்டோபரும், ஜார்ஜும் கருணாநிதி கைது செய்யப்பட்டபோதுஅவரது வீட்டுக்கு நாங்கள் போகவேயில்லை என மறுத்து அறிக்கைவெளியிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications