கூவம், அடையாறு ஆறுகளை.. சுத்தம் செய்ய பெரிய டீமையே களமிறக்கிய விஜய்! உள்ளே வந்த சர்வதேச ஜாம்பவான்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடையாறு ஆற்றில் கலக்கும் கழிவுநீரைக் கட்டுப்படுத்தி, ஆற்றைப் புனரமைக்கும் நோக்கில் நீர்வள ஆதாரத் துறை (WRD) மற்றும் தொண்டு நிறுவனங்கள் (NGOs) இணைந்து புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளன. அடையாறு ஆற்றின் பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க ஏற்கனவே பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தாலும், தற்போது சென்னை மாநகரின் நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்கான அடுத்தகட்ட முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் (CMWSSB) சைதாப்பேட்டையில் உள்ள தோடண்டர் நகர் மற்றும் குன்றத்தூர் பகுதிக்கான கரைமா நகர் ஆகிய இடங்களில் சிறிய அளவிலான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை (Modular STPs) அமைத்திருந்தது. இந்த வரிசையில், அடையாறு ஆற்றில் கலக்கும் கழிவுநீரை இடைமறித்து சுத்திகரிப்பதற்காக சவுத் லாக் தெருவில் உள்ள அடையாறு - பக்கிங்காம் கால்வாய் சந்திப்பிற்கு அருகில் மற்றுமொரு புதிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாகத் தொடங்கியுள்ளன.

Adyar river restoration

நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய திட்டம்

இந்த புதிய சுத்திகரிப்பு நிலையம் நாளொன்றுக்கு 0.625 மில்லியன் லிட்டர் (MLD) கழிவுநீரைக் கையாளும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக நீர்வள ஆதாரத் துறை சுமார் 6,000 சதுர அடி நிலத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டம் 'எஸ்.ஐ.வி இம்பாக்ட் இன்ஸ்டிடியூட்' (SIV Impact Inc) மற்றும் 'செம்காட்' (CEMCOT) உள்ளிட்ட நிறுவனங்களின் கூட்டமைப்பு மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் மிகவும் மேம்பட்ட 'அப்ஃப்ளோ அனேரோபிக் ஸ்லட்ஜ் பிளாங்கெட்' (Upflow anaerobic sludge blanket) மற்றும் 'மூவிங் பெட் பயோஃபிலிம் ரியாக்டர்' (Moving bed biofilm reactor) ஆகிய நவீன சுத்திகரிப்பு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. மேலும், இந்த முழு நிலையமும் தானியங்கி முறையில் இயங்கும் வகையில் 'ஸ்காடா' (SCADA) கண்காணிப்பு அமைப்பின் மூலம் கட்டுப்படுத்தப்படும். இதனால் மிகக் குறைந்த அளவிலான உயிரியல் கழிவுகளே (Bio-sludge) உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சுத்திகரிக்கப்பட்ட நீரின் பயன்கள் மற்றும் எதிர்காலத் திட்டம்

சுத்திகரிக்கப்பட்ட இந்த மறுசுழற்சி நீர், அடையாறு ஆற்றின் கரையோரங்களில் நடப்படவுள்ள இளம் கன்றுகளுக்கு நீர் பாய்ச்சவும், ராஜீவ் காந்தி சாலை (OMR) மத்திய தடுப்புகளில் (Medians) உள்ள செடிகளைப் பராமரிக்கவும் பயன்படுத்தப்படும். சுத்திகரிக்கப்பட்ட நீரின் ஒரு பகுதி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் நோக்கில் ஆற்றில் திறந்து விடப்படும்.

இந்த சுத்திகரிக்கப்பட்ட நீரை தொழிற்சாலைகள் மற்றும் பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு, தோட்டப் பராமரிப்பு மற்றும் குளிரூட்டும் கோபுரங்கள் (Cooling towers) போன்ற குடிநீர் அல்லாத தேவைகளுக்கு மானிய விலையில் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறார்கள். இது நல்ல தண்ணீரின் தேவையை பெருமளவில் குறைக்க உதவும்.

அதிகாரிகளின் வேட்டை: களமிறங்கும் புதிய 'நிபுணர் குழு'

பொதுவாக அரசுத் திட்டங்கள் என்றாலே மெத்தனப் போக்கு இருக்கும் என்ற விமர்சனத்தை இம்முறை உடைக்க முடிவெடுத்துள்ளது சி.ஆர்.டி.சி (CRTC). அடையாறு நதிப் பாதையை முழுமையாக மறுவடிவமைப்பு செய்ய, திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த நிபுணர்களைத் தனியார்துறை மற்றும் பொதுத்துறையிலிருந்து ஈர்க்கும் நோக்கில் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முக்கியமாக, ஒட்டுமொத்த நதி நீர் திட்டத்தின் தொழில்நுட்ப மற்றும் வடிவமைப்புப் பணிகளுக்குத் தலைமை தாங்க தலைமைப் பொறியாளர் (Chief Engineer), ஆக்கிரமிப்புகள் அகற்றம் மற்றும் நதிக்கரையோர நிலங்களை ஒழுங்குபடுத்த நில மேலாண்மை அதிகாரி (Land Management Officer) மற்றும் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிதி ஒதுக்கீட்டைத் துல்லியமாக நிர்வகிக்க நிதி நிர்வாகிகள் (Financial Executives) உள்ளிட்ட மிக முக்கியப் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

இது வெறும் சாதாரணப் பணி நியமனம் அல்ல; மாறாக சென்னை நதிகள் மீட்புத் திட்டத்திற்குத் தேவையான 'மூளை'களைத் தேர்ந்தெடுக்கும் மிக முக்கிய நகர்வாகவே பார்க்கப்படுகிறது.

10 ஆண்டுகால பராமரிப்பு மற்றும் மாதிரித் திட்டம்

சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இத்திட்டத்திற்கு பிரபல நிறுவனமான 'அமேசான்' (Amazon) முழு நிதியுதவி வழங்கியுள்ளது. இத்திட்டத்தின் நீடித்த நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக, அடுத்த 10 ஆண்டுகளுக்கான இயக்கம் மற்றும் பராமரிப்பு (Operation and Maintenance) செலவுகளும் இந்த நிதியிலேயே சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த முன்மாதிரித் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்ட பிறகு, இதே போன்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாம்பலம் கால்வாய் போன்ற சென்னை மாநகரின் பிற முக்கிய நீர்நிலைகளிலும் இத்திட்டத்தை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இம்முயற்சி சென்னையின் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கும், நீர்நிலைகளின் பாதுகாப்பிற்கும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+