அப்பல்லோவில் கருணாநிதி அனுமதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் ரூ 12 கோடி ஊழல் நடந்தது தொடர்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதி வெள்ளிக்கிழமை அப்பல்லோமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 29 ம் தேதி நள்ளிரவு கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட கருணாநிதி 5 நாட்களுக்குப்பிறகுபுதன்கிழமை மாலை விடுதலை செய்யப்பட்டார்.

விடுதலை செய்யப்பட்ட கருணாநிதி கழுத்து வலியாலும், கை, கால் வலியாலும் அவதிப்பட்டு வருவதால் அவர் உடனடியாகஅப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதிக்கு பல மருத்துவப் பரிசோதனைகள் செய்யவிருப்பதாகஅவரது குடும்ப டாக்டர் கோபால் தெரிவித்தார்.

கருணாநிதியை அவரது மனைவி தயாளு அம்மாள் மற்றும் மகள் கனிமொழி ஆகியோர் அருகிலிருந்து கவனித்து வருகின்றனர்.

அன்பழகன் பார்த்தார்:

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதியை திமுக பொதுச்செயலாளர் அன்பழன்மருத்துவமனைக்குச் சென்று பார்த்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், கருணாநிதிக்கு அனைத்து விதமான மருத்துவப் பரிசோதனைகளும்செய்யப்படவுள்ளது.

அவர் இன்னும் 3 அல்லது 4 நாட்களில் வீடு திரும்புவார் என்றார்.

ஏராளமான திமுக பிரமுகர்களும், திமுக முன்னாள் அமைச்சர்களும் அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று கருணாநிதியின்உடல்நிலை குறித்துத் கேட்டுத் தெரிந்து கொண்டனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+