ஆளுநரிடம் வீடியோ கேசட் கொடுத்தார் ஜெ.
சென்னை:
தமிழக ஆளுநர் ரங்கராஜனை முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை கவர்னர் மாளிகையில் சந்தித்துப் பேசியபோது, போலீஸ் தரப்பில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ கேசட்டையும் ஆளுநரிடம் கொடுத்தார்.
ஆளுநரின் அழைப்பின் பேரில்தான் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதி, மத்தியஅமைச்சர்கள் முரசொலி மாறன், டி.ஆர். பாலு ஆகியோர் கைது செய்யப்பட்ட விதம் குறித்து ஜெயலலிதாஆளுநரிடம் விளக்கம் அளித்தார் என்று கூறப்படுகிறது.
சுமார் 40 நிமிடங்கள் வரை இந்தச் சந்திப்பு நீடித்ததாகக் கூறப்படுகிறது.
போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டிருப்பது பற்றியும் ஜெயலலிதாவிடம்ஆளுநர் விசாரித்து அறிந்தார் என்றும் கூறப்படுகிறது.
திமுக எம்.பிக்களும் ஆளுநருடன் சந்திப்பு:
ஜெயலலிதா ஆளுநரைச் சந்தித்ததையடுத்து, திமுக எம்.பிக்களும் ஆளுநர் ரங்கராஜனைச் சந்தித்தனர். திமுகஎம்.பிக்களான வி.பி. துரைசாமி, மிசா கணேசன் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆளுனரைச் சந்தித்தனர்.கருணாநிதி கைது செய்யப்பட்ட போது படமாக்கப்பட்ட ஒரு வீடியோ கேசட்டை இவர்களும் ஆளுநரிடம்கொடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications