23-ம் தேதி ராஜ்யசபா தேர்தல்
சென்னை:
தமிழகத்திலிருந்து காலியாகும் 6 ராஜ்யசபா எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் 23ம் தேதி நடக்கிறது.
தேர்தலுக்கான அறிவிப்பு வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
தமிழகத்திலிருந்து ராஜ்யசபாவில் எம்.பிக்களாக உள்ள 6 பேரின் பதவிக்காலம் முடிவடைகிறது. ஜெயந்திநடராஜன், வி.பி.துரைசாமி, ஓ.பி.மணியன், மஸ்தான், மார்க்கபந்து, ராஜேந்திரன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம்முடிவடைகிறது.
இதையடுத்து இந்தக் காலியிடங்களை நிரப்புவதற்காக தேர்தல் நடைபெறவுள்ளது.
இதற்கான வேட்பு மனுத் தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் 13ம்தேதியாகும். 14ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும்.
16ம் தேதிக்குள் மனுக்களை வாபஸ் பெற வேண்டும். 6 பேருக்கும் மேல் மனுத்தாக்கல் செய்திருந்தால் 23ம் தேதிதேர்தல் நடைபெறும்.
தமிழக சட்டசபையில் உள்ள எம்.எல்.ஏக்கள் வாக்களித்து ராஜ்யசபா எம்.பிக்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.
இப்போது சட்டசபையில் கட்சிகளுக்கு உள்ள பலத்தை வைத்துப் பார்த்தால், அ.தி.மு.க. சார்பில் 5 எம்.பிக்களைத்தேர்வு செய்ய முடியும். இதில் ஒரு எம்.பிக்கு கூட்டணிக் கட்சிகளின் ஓட்டும் தேவைப்படும்.
திமுக சார்பில் ஒருவர் எம்.பியாக முடியும்.












Click it and Unblock the Notifications