ஸ்டாலினுக்கு ஜாமீன் கிடைத்தது: நாளை விடுதலை
சென்னை:
மேம்பாலங்கள் கட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட சென்னை மேயர் மு.க. ஸ்டாலினுக்கு ஜாமீன் வழங்கசென்னை செசன்ஸ் கோர்ட் உத்தரவிட்டது.
ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி அசோக்குமார், வெள்ளிக்கிழமை மாலை ஸ்டாலினை ஜாமீனில் விடுதலைசெய்ய உத்தரவிட்டார். ஆனாலும் அவர் சனிக்கிழமை காலையில்தான் விடுதலை செய்யப்படுவார் என்றுகூறப்படுகிறது.
சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் ரூ.12 கோடி ஊழல் நடந்தது தொடர்பாக ஸ்டாலின் கடந்த ஜூன் மாதம்30ம் தேதி நீதிபதி முன் சரணடைந்த பிறகு, கைது செய்யப்பட்டார். முதலில் சென்னை மத்திய சிறையில்அடைக்கப்பட்ட அவர், பின்னர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜாமீன் விடுதலையைக் கேள்விப்பட்ட பின்னர், மதுரை சிறையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "நான்குற்றமற்றவன் என்பது நிரூபணமாகியுள்ளது. விரைவில், இந்த வழக்கிலிருந்தும் விடுபடுவேன்" என்று ஸ்டாலின்கூறினார்.
கோர்ட், சிறை சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்த பிறகு, சனிக்கிழமை காலையில்தான் அவர் சிறையில் இருந்துவெளியே வருவார் என்று கூறப்படுகிறது.
முன்னாள் அமைச்சர், தலைமைச் செயலரும் ஜாமீனில் விடுதலை:
இதே வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் திமுக அமைச்சர் கோ.சி. மணிமற்றும் முன்னாள் தமிழக தலைமைச் செயலாளர் நம்பியார் ஆகியோரையும் ஜாமீனில் விடுவிக்க நீதிபதிஅசோக்குமார் வெள்ளிக்கிழமை மாலை உத்தரவிட்டார்.
முன்னாள் அமைச்சர்கள், தலைமைச் செயலரும் ஜாமீனில் விடுதலை:
இதே வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் திமுக அமைச்சர்களான கோ.சி.மணி, பொன்முடி மற்றும் முன்னாள் தமிழக தலைமைச் செயலாளர் நம்பியார் ஆகியோர் உள்பட 7 பேரை ஜாமீனில்விடுவிக்க நீதிபதி அசோக்குமார் வெள்ளிக்கிழமை மாலை உத்தரவிட்டார்.