கருணாநிதி விடுதலைக்கு மக்களின் கொந்தளிப்புதான் காரணம்: அத்வானி
டெல்லி:
கருணாநிதி மற்றும் மத்திய அமைச்சர்கள் விடுதலை செய்யப்பட்டதற்கு மக்களின்ஆவேச உணர்ச்சிகள்தான் காரணம் என மத்திய உள்துறை அமைச்சர் அத்வானிகூறியுள்ளார்.
வெள்ளிக்கிழமை டெல்லியில் அத்வானி தலைமையில் உள்துறை அமைச்சகஆலோசனை கூட்டம் நடந்ததது. அந்த கூட்டத்தில் தி.மு,க.எம்.பி. விடுதலை விரும்பிகூறுகையில், தமிழகத்தில் கருணாநிதி மற்றும் மத்திய அமைச்சர்கள் கைதுசெய்யப்பட்டது இதுவரை நடந்திராத சம்பவம்.
இதற்கு மத்திய அரசு சரியான சமயத்தில், சரியான நடவடிக்கை எடுத்ததுபொருத்தமாக இருந்தது என்றார்.
அதற்கு பதலளித்து அத்வானி கூறுகையில், கைது செய்யப்பட்ட கருணாநிதி, மத்தியஅமைச்சர்கள் முரசொலி மாறன், டி.ஆர். பாலு ஆகியோர் தீடீரென விடுதலைசெய்யப்பட்டதற்கு பொதுமக்களின் உணர்ச்சி கொரந்தளிப்பும், ஆவேசமும்தான்முக்கிய காரணம் என்றார்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.பிக்கள் கரண்சிங் மற்றும் பனத்வாலா ஆகியோர்கூறுகையில், தமிழகத்தில் ஆளுனராக இருந்த பாத்திமா பீவி பதவிநீக்கம்செய்யப்பட்டது சரியல்ல என்றனர்.












Click it and Unblock the Notifications