தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை நீதிபதி மறுப்பு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கை கப்பற்படையால் பிடிக்கப்பட்ட 66 தமிழக மீனவர்களை விடுவிக்க முடியாது என்று யாழ்ப்பான கோர்ட்நீதிபதி ஒருவர் கூறியுள்ளார்.
இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து, மீன் பிடித்ததற்காக, கடந்த ஏப்ரல் மாதம் முதல் 66 தமிழக மீனவர்கள்கைது செய்யப்பட்டு, யாழ்ப்பான சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், அவர்கள் பயன்படுத்திய 15 படகுகளும்கைப்பற்றப்பட்டன.
அவர்கள் அனைவரும், தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று மனு கொடுத்தனர். இது சம்பந்தமாக,அட்டர்னி ஜெனரலுக்கு போலீஸார் அனுப்பிய ஆவணங்கள் இன்னும் திரும்பி வராத காரணத்தால்தான் தமிழகமீனவர்களை விட மறுப்பதாகக் கூறப்படுகிறது.
இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகத்தின் உயர் அதிகாரிகள், யாழ்ப்பான ஜெயிலுக்குச் சென்று, மீனவர்களைப்பார்த்து அவர்கள் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications