For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கண்ணிவெடியில் சிக்கி 8 விடுதலைப் புலிகள் சாவு

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

இலங்கையில் வெவ்வேறு இடங்களில் நடந்த 3 தாக்குதல்களில் 15 விடுதலைப் புலிகள் இறந்தனர்.

இது குறித்து இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், திருகோணமலையிலிருந்து 40 கி.மீ.தொலைவில் உள்ள கதிரவேலி என்ற இடத்தில் ராணுவம் வைத்த கண்ணி வெடியில் சிக்கி 8 புலிகள் இறந்தனர்.

அதே போல திரிகோணமலையில் உள்ள முட்டூரை அடுத்த நீலபோல பகுதியில் விடுதலைப் புலிகள் மீதுராணுவத்தின் ரோந்துக் குழு தாக்குதல் நடத்தியது. இதில் 2 புலிகள் கொல்லப்பட்டனர்.

வெலியோலா என்ற இடத்தில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 5 புலிகள் கொல்லப்பட்டனர். இவர்களிடமிருந்துபெரும் அளவிலான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.

இவ்வாறு ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறினார்.

ஆனால், ராணுவத் தரப்பில் ஏற்றபட்ட சேதம் குறித்து எந்த விவரமும் அளிக்கவில்லை.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X