For Daily Alerts
Just In
கண்ணிவெடியில் சிக்கி 8 விடுதலைப் புலிகள் சாவு
கொழும்பு:
இலங்கையில் வெவ்வேறு இடங்களில் நடந்த 3 தாக்குதல்களில் 15 விடுதலைப் புலிகள் இறந்தனர்.
இது குறித்து இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், திருகோணமலையிலிருந்து 40 கி.மீ.தொலைவில் உள்ள கதிரவேலி என்ற இடத்தில் ராணுவம் வைத்த கண்ணி வெடியில் சிக்கி 8 புலிகள் இறந்தனர்.
அதே போல திரிகோணமலையில் உள்ள முட்டூரை அடுத்த நீலபோல பகுதியில் விடுதலைப் புலிகள் மீதுராணுவத்தின் ரோந்துக் குழு தாக்குதல் நடத்தியது. இதில் 2 புலிகள் கொல்லப்பட்டனர்.
வெலியோலா என்ற இடத்தில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 5 புலிகள் கொல்லப்பட்டனர். இவர்களிடமிருந்துபெரும் அளவிலான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.
இவ்வாறு ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறினார்.
ஆனால், ராணுவத் தரப்பில் ஏற்றபட்ட சேதம் குறித்து எந்த விவரமும் அளிக்கவில்லை.
யு.என்.ஐ.
Comments
Story first published: Saturday, May 19, 2001, 5:30 [IST]