ஜூலை 14ல் பொதுக்குழுவைக் கூட்டுகிறது பா.ம.க.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம், கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸின் சொந்த ஊரானதைலாபுரத்தில் ஜூலை 14ம் தேதி நடக்கிறது.
ராஜ்யசபா தேர்தலில் எம்.பி. சீட் கொடுக்கவில்லை என்ற காரணத்திற்காக அதிமுக கூட்டணியிலிருந்து அதிரடியாகவிலகிக் கொண்டுள்ளது பாட்டாளி மக்கள் கட்சி. அதிமுக கூட்டணியிலிருந்து விலகினால், திமுக கூட்டணியில்இணைவதுதான் பாமகவின் வாடிக்கை.
அந்த வகையில் தற்போது தமிழகத்தில் திமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவதுகுறித்து முடிவெடுக்க பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டுகிறது பாமக.
டாக்டர் ராமதாஸின் சொந்த ஊரான தைலாபுரத்தில் வரும் 14ம் தேதி பொதுக்குழுக் கூட்டம் நடக்கவுள்ளது. இதில்தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேருவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கட்சியின் தலைவர் ஜி.கே. மணிகூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications