போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராடுவோம்---- கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

என்னைத் தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் நடத்தப்படும் என முன்னாள் தமிழகமுதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி கூறினார்.

தான் கைது செய்யப்பட்ட போது, போலீஸார் நடத்திய "தள்ளுமுள்ளு" காரணமாக, கை, கால், தோள்பட்டைகளில்வலி ஏற்பட்டுள்ளதாகக் கருணாநிதி கூறியதை அடுத்து, அவர் அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு பிசியோதெரப்பி உள்ளிட்ட பல மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. அவர் தற்போது நல்லஉடல்நிலையுடன் இருக்கிறார் என்று மருத்துவர்கள் கூறினர்.

இதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை காலை கருணாநிதி மருத்துவமனையிலிருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.அப்போலோ மருத்துவமனையிலிருந்து வீல் சேரில் காருக்குக் கொண்டு வரப்பட்ட கருணாநிதி வீடு கிளம்புவதற்குமுன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

என்னையும் மத்திய அமைச்சர்களையும் தாக்கிய போலீஸார் மீது, இதுவரை எந்த நடவடிக்கையையும் தமிழகஅரசு எடுக்கவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் போராடுவோம்.

போராட்டம் குறித்த அடுத்த கட்ட நடவடிக்கை, திமுகவின் செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். அதிமுககூட்டணியிலிருந்து விலகி வந்துள்ள பாமகவை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் சேர்த்துக் கொள்வதுபற்றியும் செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்வோம்.

இது குறித்து பிரதமர் வாஜ்பாயுடனும் ஆலோசனை நடத்துவோம் என்றார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+