For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை: கலக்கத்தில் சந்திரிகா

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

மக்கள் கூட்டணியைச் சேர்ந்த கட்சிகள் தன்னைவிட்டு ஓடிக் கொண்டிருப்பதைப் பார்த்து கதி கலங்கிப் போய்இருக்கிறார் சந்திரிகா குமாரதுங்கா.

கடந்த மாதம் வரை மக்கள் கூட்டணியோடு கைகோர்த்துக் கொண்டிருந்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, வெடுக்கெனதன் கையைப் பிடுங்கிக் கொண்டு போய்விட்டது. காரணம் இல்லாமல் இல்லை.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் ஒரு அமைச்சர் பதவியைக் கொடுத்திருந்தார் சந்திரிகா. ஆனால், தாங்கள் கூறும்எந்தப் பிரச்சனைகளையும் அதிபர் கவனிக்கவில்லை என்று அந்த அமைச்சர் கூறி வந்தார். இதையடுத்து, அந்தஅமைச்சரைப் பதவியில் இருந்து தூக்கி வீசினார் சந்திரிகா.

பிரச்சினை ஆரம்பமானது. ஆளும் மக்கள் முன்னணிக்குக் கொடுத்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டது முஸ்லிம்காங்கிரஸ் கட்சி. இதையடுத்து, ஆளும் கூட்டணிக் கட்சிகளின் எண்ணிக்கையில் 11 குறைந்துவிட்டது. 109இடங்களை மட்டுமே வைத்துக் கொண்டு, சந்திரிகா போராடிக் கொண்டிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து, சந்திரிகா அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வரும் வேலையில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதோ அதோ என்று இலங்கை நாடாளுமன்றக் கூட்டத்தைக்கூட்டுவதை, சந்திரிகா தள்ளி வைத்துக் கொண்டே இருந்தார். இதன் மீதான விவாதம் இந்த மாத இறுதிக்குள்நடைபெறும் என்று தெரிகிறது.

இந் நிலையில், தற்போதுள்ள மக்கள் கூட்டணியில் இருந்தும் சில கட்சிகள் பிய்த்துக் கொண்டு ஓடிவிடுமோ என்றஅச்சம் சந்திரிகாவுக்கு எழுந்துள்ளது. உள்ளதும் போய்விட்டால், அரசியல் எதிர்காலமே கேள்விக் குறியாகிவிடுமே என்ற பயத்தில் உள்ளார் சந்திரிகா.

இருந்தாலும், பெருத்த நம்பிக்கையுடன் போராடி வருகிறார் அதிபர். "யார் வேண்டுமானாலும், எத்தனை பேர்வேண்டுமானாலும் என்னைக் கடந்து போங்கள். ஆனாலும் நான்தான் அதிபராகத் தொடர்ந்து நீடிப்பேன்" என்றுதன்னம்பிக்கையுடன் கூறியுள்ளார் சந்திரிகா குமாரதுங்கா.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X