கன்னியாகுமரி 133 அடி திருவள்ளுவர் சிலையில் ஊழலா?
நாகர்கோவில்:
சென்னையில் 10 மேம்பாலங்கள் கட்டியதில் திமுக ஊழல் செய்தது என புகார் பதிவு செய்து அவசர அவரசமாய்தமிழக அரசும் போலீசாரும் கருணாநிதி, ஸ்டாலின் மீது நள்ளிரவில் நடவடிக்கை எடுக்க அந்த வழக்கே அரசுக்குஎதிராகத் திரும்பிவிட்டது.
இந் நிலையில் கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுள்ள 133 அடி திருவள்ளுவர் சிலையை கையில் எடுத்துள்ளார்ஜெயலலிதா. இந்த சிலை அமைத்ததிலும் திமுக ஊழல் புரிந்துள்ளது என்று தமிழக அமைச்சர் தளவாய் சுந்தரம்கூறியுள்ளார்.
திங்கள்கிழமை அவர் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கன்னியாகுமரியில் நடுக்கடலில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையின் கட்டுமானப் பணியில் ஏகப்பட்டஊழல்களைப் புரிந்துள்ளது முந்தைய திமுக அரசு.
இந்தத் திருவள்ளுவர் சிலை கட்டுமானப் பணிக்கு ரூ.6.14 கோடி செலவானது என திமுக அரசு கூறியுள்ளது.ஆனால், கட்டுமானப் பணிகள் இன்னும் முழுமையடையவில்லை.
இந்நிலையில், கட்டுமானப் பணியை இன்னும் முடிக்காத காரணத்திற்காகப் போராடப் போவதாக திமுகவில்சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்த சுரேஷ் ராஜன் கூறியுள்ளார். இதுதான் வேடிக்கையாக இருக்கிறது.
திருவள்ளுவர் சிலை கட்டுமானப் பணிக்கு ஆன செலவில் ஏராளமான ஊழல் நடந்துள்ளது. இதற்கான விசாரணைநடந்து வருகிறது. இதன் கட்டுமானப் பொறியாளர் ஆனந்த குமாரை தொடர்ந்து விசாரித்து வருகிறோம்.
அப்போது முதல்வராக இருந்த கருணாநிதிக்கும், சுரேஷ் ராஜனுக்கும் இந்த ஊழலில் பெரும் பங்கு இருக்கிறது.விரைவில் அனைத்தும் வெளியில் வரும் என்றார் தளவாய் சுந்தரம்.
சிலை அமைக்க எவ்வளவு செலவானது என்பது குறித்து 2 சிற்பிகளை வைத்து தமிழக அரசு ஆராய்ந்து வருகிறது.இந்த சிலையை உலகப் புகழ் வாய்ந்த கணபதி ஸ்தபதி தான் செய்தார். இப்போது அரசு சார்பில் சிலையைஆராய்ந்து வரும் 2 சிற்பிகளும் அவரது சிஷ்யர்கள் தான் எனவும் கூறப்படுகிறது.
கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறைக்கு அருகே உள்ள பாறையின் மீது தான் இந்த திருவள்ளுவர் சிலைஅமைக்கப்பட்டது. திருக்குறளை வைத்து குறளோவியம் எழுதியவர் கருணாநிதி. பின்னர் சென்னையில் வள்ளுவர்கோட்டம் அமைத்தார். அதன் சுவர்களில் எல்லாம் திருக்குறளை செதுக்க வைத்தவர் கருணாநிதி என்பதுகுறிப்பிடத்தக்கது.