சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் கலாட்டா: அவையை ஒத்தி வைத்தார் ஸ்டாலின்
சென்னை:
புதன்கிழமை கூடிய சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் பெரும் கூச்சல், ரகளை ஏற்பட்டதை அடுத்து, கூட்டத்தைஅவசர அவசரமாக ஒத்தி வைத்தார் மேயர் மு.க. ஸ்டாலின்.
வரும் உள்ளாட்சித் தேர்தலையொட்டி, வாக்காளர் பட்டியலைச் சரிபார்ப்பதற்காகவும், வாக்குச் சாவடிகள் பற்றியவிவரங்களைத் தெரிந்து கொள்வதற்காகவும் சென்னை மாநகராட்சிக் கூட்டம் புதன்கிழமை அவசரமாகக் கூடுகிறதுஎன்று மாநகராட்சி கமிஷனர் ஆச்சார்யலு திங்கள்கிழமை அறிவித்திருந்தார்.
அப்போது, 115 வாக்குச் சாவடிகள் பற்றி இன்னும் தகவல்கள் சேகரிக்க வேண்டியிருப்பதால், இதற்காக மேலும் 15நாட்கள் அவகாசம் வேண்டும் என்று சில உறுப்பினர்கள் கூறினார்கள். இதையடுத்து, தமாகா உறுப்பினர் ஒருவர்கோபாவேசமாகப் பேசியவாறு, சில பேப்பர்களைத் தூக்கி வீசினார். இதனால் சலசலப்புடன் தகராறு ஏற்பட்டது.
அப்போது, மாநகராட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் வெற்றிவேல் அங்கு வந்ததையடுத்து, தகராறு மேலும்முற்றியது. திமுக உறுப்பினர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் காராசாரமாகப் பேசிக் கொண்டதையடுத்து,பிரச்சினை மேலும் தீவிரமாகியது.
இதையடுத்து, மேயர் ஸ்டாலின் கூட்டத்தை ஒத்தி வைத்தார். "தகராறு வலுத்துக் கொண்டே போனதால், வேறுஎதுவும் அசம்பாவிதம் நடந்து விடும் என்பதற்காகத்தான் கூட்டத்தை ஒத்தி வைத்தேன்" என்று அவர்விளக்கமளித்தார்.
ஆனால், முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களான கராத்தே தியாகராஜனும் வெற்றிவேலும் கூறுகையில், "உள்ளாட்சித்தேர்தலில், தாங்கள் எப்படியும் தோற்று விடுவோம் என்ற பயத்தினால்தான், ஸ்டாலின் கூட்டத்தை ஒத்தி வைத்துவிட்டார்" என்று நிருபர்களிடம் கூறினார்கள்.
மாநகராட்சிக் கூட்டத்தில் தகராறு ஏற்பட்டதையடுத்து, மாநகராட்சிக் கட்டடம் முழுவதும் பலத்த பாதுகாப்புபோடப்பட்டிருந்தது.
அவசரமாகக் கூட்டப்பட்ட இந்த மாநகராட்சிக் கூட்டத்தைப் பற்றிய அறிவுப்பு, முன்னரே தனக்குத்தெரிவிக்கப்படவில்லை என்று மேயர் ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை கூறியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications