ஏழை மாணவரின் டாக்டர் கனவை நனவாக்கினார் ஜெ.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ரூ. 1 லட்சம் கல்வி உதவியை அளித்து, ஏழைக் குடும்ப மாணவர் ஒருவரின் மருத்துவக் கனவை முதல்வர்ஜெயலலிதா நனவாக்கியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவக் குடும்பத்தில் பிறந்தவர் மரியா சுபிசன். இந்த ஆண்டு நடந்த பிளஸ்டூ தேர்வில் நிறைய மதிப்பெண்கள் எடுத்ததுடன், மே மாதம் நடந்த நுழைவுத் தேர்விலும் அதிக மதிப்பெண்களைக்குவித்துள்ளார் சுபிசன்.
இவ்விஷயத்தைக் கேள்விப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, சுபிசனுக்கு உதவும் பொருட்டு, ரூ. 1 லட்சம் கல்விஉதவித் தொகையாக புதன்கிழமை வழங்கினார். இதையடுத்து, சுபிசனின் டாக்டர் கனவு நனவாகி விட்டது.
எம்ஜிஆர் அறக்கட்டளையிலிருந்து இந்த நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications