மத்திய அரசு மீது கருணாநிதி கோபம்
சென்னை:
நான் போலீசாரால் தாக்கப்பட்ட விஷயத்தில் தமிழக அரசு மீது மத்திய அரசு உடனடிய நடவடிக்கைஎடுக்கவில்லை என முன்னாள் முதல்வர் கருணாநிதி வருத்தம் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சியில் திமுக ஆட்சியில் உள்ளது என்பதற்காகவே அவையை இயங்க விடாமல் தடுக்கிறதுஜெயலலிதா அரசு. அதிகாரிகள் மேயரோடு (ஸ்டாலின்) ஒத்துழைக்க மறுக்கிறார்கள். அவர் சோதனைகளுக்குசெல்லும்போது உடன் வர மறுக்கிறார்கள்.
மீண்டும் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மாநகராட்சியில் வேறு கட்சி ஆட்சியில் இருந்து, இதே போன்ற ஒரு மீண்டும்ஏற்பட்டால் ஜனநாயகத்தின் நிலை என்னவாகும்?
தமிழக அரசு மீது மத்திய அரசு வேகமாக நடவடிக்கை எடுக்கவில்லை என பத்திரிக்கையாளர்கள் என்னிடம்கேட்கிறார்கள். இந்த கேள்வி மத்திய அரசின் காதுகளிலும் விழும் என நம்புகிறேன். நானும் ஒருபத்திரிக்கையாளன் என்ற முறையில் நீங்கள் கேட்கிற அதே கேள்விகளைத் தான் நானும் கேட்க விரும்புகிறேன்.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.












Click it and Unblock the Notifications