கருணாநிதி கைது... போலீஸ் வீடியோவை கேபிள் டிவியில் ஒளிபரப்ப அரசு உத்தரவு
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி அவரது வீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டபோது போலீஸார் எடுத்த வீடியோபடத்தை தமிழகம் முழுவதிலும் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மூலம் ஒளிபரப்ப தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த நிலையில் இந்த வீடியோ படத்தை தமிழக அரசின் செய்தி விளம்பரத்துறை செய்திப்படமாக மாற்றி மாவட்டகலெக்டர்களுக்கு அனுப்பியுள்ளது. இந்த செய்திப்படத்தை கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மூலம் தினசரி குறைந்தது6 முறை ஒளிபரப்புமாறும் அவர்கள் அறிவுறுத்தப் பட்டுள்ளார்கள்.
அரசின் இந்த உத்தரவுக்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கட்சியின் தலைமைக் கழக நிர்வாக செயலாளர்விடுதலை விரும்பி இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வீடியோ படத்தை ஒளிபரப்ப, வீ.சி.பிக்களைவாடகைக்கு எடுத்துக் கொள்ள ரூ. 1000 வரை செலவு செய்து கொள்ளலாம் என்று அரசு உத்தரவிட்டிருக்கிறது.மக்கள் வரிப்பணத்தை இதுபோல சட்டவிரோதமாக செலவிடுவது கண்டனத்துக்குரியது என்று கூறியுள்ளார்.