தொடரும் கொள்ளை .. கலக்கத்தில் சென்னை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை நகரில் பல இடங்களில் தொடர்ந்து கொள்ளை மற்றும் வழிப்பறிச் சம்பவங்கள் நடந்து வருகின்றன.தொடரும் கொள்ளைச் சம்பவங்களால் பெண்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

சென்னை நகரின் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து வழிப்பறிக் கொள்ளைகள் மற்றும் வீடுகளில் கொள்ளைச்சம்பவங்கள் நடந்து வருகின்றன.

குறிப்பாக தனியாக வீடுகளில் இருக்கும் பெண்களிடம் தண்ணீர் கேட்பது போலவும், அட்ரஸ் கேட்பது போலவும்முயலும் திருடர்கள் பின்னர் அப்பெண்களிடம் கத்தியைக் காட்டி நகை, பணத்தைப் பறித்துக் கொண்டு தப்பிவிடுகின்றனர்.

வேளச்சேரி, விஜயநகர், அரும்பாக்கம் உள்ளிட்ட பல புறநகர்ப்பகுதிகளில் இந்த கொள்ளைச் சம்பவங்கள்அதிகமாக நடக்கின்றன.

விஜயநகர் பகுதியில், ஒரே நாளில் ஒரே பகுதியில் இரண்டு கொள்ளைச் சம்பவங்கள் நடந்துள்ளன. வீடுகளில்தனியாக இருந்த பெண்களிடம் குடிக்கத் தண்ணீர் கேட்பது போல வந்து இந்தக் கொள்ளைச் சம்பவங்கள்நடந்துள்ளன.

விஜயநகர் பகுதியில் இதுபோல சம்பவங்கள் நடப்பது புதிதல்ல. அடிக்கடி இங்கு கொள்ளைச் சம்பவங்கள்நடக்கின்றன. வீடுகளில் வைத்திருக்கும் சைக்கிள்களைத் திருடுவதற்காகவே ஒரு கும்பல் உள்ளது. அடிக்கடி பலவீடுகளில் சைக்கிள் மட்டும் திருடு போய்விடுகிறது. பிற வாகனங்களை அப்படியே விட்டு விடுகின்றனர்.

அரும்பாக்கம் பகுதியில் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. அப்போது 6 பெண்களிடம் நகைகள்திருடப்பட்டன. பட்டப் பகலில் நடந்த இந்தத் திருட்டால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடரும் இந்தக் கொள்ளைச் சம்பவங்களால் பெண்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதற்கு போலீஸார் ஒருமுற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+