மிகுந்த நம்பிக்கையுடன் முஷாரபை சந்திக்கிறேன்: வாஜ்பாய்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

மிகுந்த நம்பிக்கையுடன் பாகிஸ்தான் அதிபர் முஷாரபை சந்திப்பதாக பிரதமர் வாஜ்பாய் கூறினார்.

வெள்ளிக்கிழமை அவர் அளித்த சிறப்புப் பேட்டியில்,

பாகிஸ்தானுடன் எப்போதுமே நல்ல உறவைத் தான் இந்தியா விரும்பி வந்திருகிறது. இந்தியா வரும் முஷாரப்புதிய உறவுக்கு வழி வகுப்பார் என நம்புகிறேன்.

மோதல், போர், தாக்குதல்கள் ஆகியவற்றிலிருந்து விலகி நல்லுறவு, பேச்சுவார்த்தை, வளர்ச்சி, ஒற்றுமை போன்றஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு இந்தப் பேச்சுவார்த்தை உதவும் என நம்புகிறேன்.

ஹூரியத் தலைவர்களை டீ பார்டிக்கு அழைக்க வேண்டிய நிர்பந்தம் முஷாரபுக்கு உள்ளது. அவரது நாட்டில் உள்ளநெருக்கடி காரணமாகவே அவர்களை முஷாரப் அழைத்திருப்பார் என நினைக்கிறேன்.

காஷ்மீர் உள்ளிட்ட எல்லா பிரச்சனைகளையும் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தான் தீர்க்க முடியும். இந்தப்பிரச்சனையில் மூன்றாவதாக எந்த நாடும் அல்லது எந்த அமைப்பும் தலையிடுவதை ஏற்க மாட்டோம். ஹூரியத்இந்தப் பிரச்சனையில் தலையிடுவதையும் ஏற்க மாட்டேன்.

காஷ்மீர் பிரச்சனை குறித்து முஷாரப் நிச்சயம் பேசுவார். அதே போல நானும் காஷ்மீர் தீவிரவாதிகளுக்குபாகிஸ்தான் உதவி வருவது குறித்து அவரிடம் நிச்சயம் கேள்வி கேட்பேன். தீவிரவாதிகளை ஒழித்துக் கட்டவும்எங்களுக்கு பலம் உள்ளது என்பதையும் சுட்டிக் காட்டுவேன்.

முதலில் தாக்க மாட்டோம் என்று இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் ஆர்வம்காட்டுகிறது. ஆனால், காஷ்மீரில் அந்த நாடு நடத்தி வரும் மறைமுக போரும் இதில் அடங்குமா?

சியாச்சினில் இரு நாடுகளும் படைகளை வாபஸ் வாங்குவது குறித்தும் பேசுவோம்.

இவ்வாறு வாஜ்பாய் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+