தொழிலதிபர்களைக் "குறி வைக்கிறார் ஜெயலலலிதா

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இந்திய தொழிலகங்களின் கூட்டமைப்பின் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.

இந்த கூட்டமைப்பின் தேசிய கவுன்சில் கூட்டம் சென்னையில் வெள்ளிக்கிழமை நடக்கிறது. இதில் சிறப்புஅழைப்பாளராக கலந்து கொள்ள முதல்வர் ஜெயலலிதா அழைக்கப்பட்டுள்ளார். இந்தியா முழுவதிலும் உள்ளதொழிலதிபர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

தொழிலதிபர்களைக் கவர்ந்து, தமிழகத்தில் அதிக முதலீடுகள் செய்ய அழைக்கவும், அ.தி.மு.க அரசின்தொழிற்கொள்கையை அறிவிக்கவும் இந்தக் கூட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள ஜெயலலிதாதிட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

தி.மு.க ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் ஏராளமான முதலீடுகள் குவிந்தன. அவர்களில் பெரும்பாலானவர்கள்தற்போது தங்களது முதலீடுகளை தமிழகத்தில் செய்ய தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. எனவேஅவர்களையும் சமாதானப்படுத்தக் கூடிய சில அறிவிப்புகளை அவர் வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வரான பின் ஜெயலலிதா கலந்து கொள்ளும் முதல் வெளி நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+