ஒரு வழியாக முடிவுக்கு வந்தார் மூப்பனார்
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ராஜ்ய சபா எம்.பி. ஆகிறார் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரான பி.எஸ்.ஞானதேசிகன். இதன்மூலம், நீண்ட நாட்களாகக் கட்சியில் நீடித்து வந்த குழப்பம் நீங்கிவிட்டது என்றே கூறலாம்.
ஆனால் மூப்பனார் இதற்குச் செவி சாய்க்க மறுத்து விட்டார். வாரிசு அரசியல் பிரச்சனையைத் தம் கட்சியிலும்வருவதை அவர் விரும்பவில்லை.
தற்போது எம்.பியாக உள்ள ஜெயந்தி நடராஜனுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், எம்.எல்.ஏக்கள் கூட்டத்துக்கு வரவில்லை. மேலும், ஜெயந்தி நடராஜனுக்கு இந்த முறைவாய்ப்பு கம்மிதான் என்றும் கூறப்பட்டது.
ஆனால், எந்த ஒரு முடிவும் எடுக்கப்படாமலேயே எம்.எல்.ஏக்கள் கூட்டம் முடிந்துவிட்டது. ஆனாலும், கட்சியின்செய்தித் தொடர்பாளரான ஞானதேசிகன் அல்லது கட்சியின் துணைத் தலைவர் அப்துல் காதர் ஆகியோரில்யாராவது ஒருவருக்கு நிச்சயம் சீட் என்று நேற்றே மூப்பனார் முடிவெடுத்து விட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில், ஞானதேசிகனே ராஜ்ய சபா எம்.பி. தேர்தலுக்குப் போட்டியிடும் வேட்பாளராக வெள்ளிக்கிழமைகாலை அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, கட்சியில் இவ்வளவு நாளும் நீடித்து வந்த குழப்பத்திற்குமுற்றுப்புள்ளியை வைத்துள்ளார் மூப்பனார்.
வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்குக் கடைசி நாளான இன்று (வெள்ளிக்கிழமை)தான் தமாகா சார்பில் தேர்வுசெய்யப்பட்டுள்ளார் ஞானதேசிகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து, ஞானதேசின் வேட்பு மனுத்தாக்கலும் செய்து விட்டார். சிறந்த அட்வகேட்டான ஞானதேசிகன்,தமாகாவின் சட்ட ஆலோசகராகவும் இருந்து வருகிறார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications