For Daily Alerts
Just In
"டிக்கெட்.... டிக்கெட்..." கொள்ளையர்கள்
சென்னை:
சென்னைக்கு வந்து கொண்டிருந்த பெங்களூர் ரயிலில் டிக்கெட் பரிசோதகர்கள் போல வந்து, டிக்கெட் இல்லாமல்பயணம் செய்த பயணிகளிடம் பணம் வசூலித்தபோது, பயணிகளே அந்த பலே டூப்ளிகேட்டுகளைப் பிடித்தனர்.
அப்போது 2 பேர் ரயிலில் ஏறினர். டிடிஆர் போல உடை அணிந்திருந்த அவர்கள், பயணிகளிடம் டிக்கெட் கேட்டுபரிசோதனை செய்தனர்.
பின்னர், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த சிலரிடம் அவர்கள் மிரட்டலாக, அபராதப் பணம் தருமாறு கேட்டனர்.அந்த நபர்களின் நடை, உடை, பாவணையில் சந்தேகம் அடைந்த சிலர் அவர்களை விசாரித்தனர்.
அதற்குப் பதில் சொல்ல முயாமல் டிடிஆர் இருவரும் விழித்தனர். இறுதியில் அவர்கள் இருவரும் டூப்ளிகேட்டிடிஆர் என தெரிய வந்தது.
இதையடுத்து பயணிகள் அனைவரும் சேர்ந்து இருவரையும் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.விசாரணையில் இருவரும் பெங்களூரைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்தது.
Comments
Story first published: Saturday, July 7, 2001, 5:30 [IST]