பஸ் ஸ்டாண்டுகளில்...- கருணாநிதி கைது கேசட்
சென்னை:
கருணாநிதி கைது சம்பவத்தை, 2 தனியார் டிவிகள், தங்கள் வசதிக்கேற்ற கோணங்களில்மாற்றி காண்பித்து வந்தன.
இதில்,கொலை பண்றாங்கப்பா என்று கருணாநிதி கத்துவதாக சன் டிவியும், கத்துவதுகருணாநிதி இல்லை கலாநிதி மாறன் என்று ஜெயா டிவியும் அடித்துச் சொல்லி வந்தன.
இந்நிலையில்,மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கருணாநிதி மீதான அனுதாபத்தைஅடியோடு அகற்ற, தமிழக செய்தித்துறை திட்டமிட்டுள்ளது.
இதன்படி, போலீசார் தரப்பு எடுத்த கேசட்டை (ஜெயா டிவியில் ஒளிபரப்பப்பட்டுவரும் கேசட்) பட்டி தொட்டியெங்கும் பரப்பி தங்கள் அரசின் மீது படிந்த களங்கத்தைப்போக்கத் துடிக்கின்றன.
எனவே அந்த கேசட் வேக வேகமாக பல காப்பிகள் போடப்பட்டு பஸ்ஸ்டாண்டுகளிலும்,கேபிள் டிவிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இந்த கேசட்டில்,
போலீஸ் கூப்பிட்ட உடன் சிரித்துக்கொண்டே அவர்களிடம் வருகிறார் கருணாநிதி.அப்போது மாறன் குடும்பத்தினர் வருகின்றனர். அப்போது பின்னணியில்,இதோவருகிறார்கள் வீரப்பிரதானிகள் என்று குரல் கொடுக்கப்படுகிறது.
மாறன் வந்ததும், டி.ஜி.பி. முகமது அலியிடம் பிரச்சனை செய்து அவரது முகத்தில்குத்தும் காட்சி காண்பிக்கப்படுகிறது.
அதன் பிறகு, ஏற்பட்ட தள்ளுமுள்ளில் கருணாநிதியின் கையைப்பிடித்து இழுப்பதுவேலையாள் சஞ்சீவி தான், முகமது அலி அல்ல என்றும் அம்புக்குறியிட்டுகாட்டப்படுகிறது.
இனி பொய்களை யாரும் கூவி விற்க முடியாது. நமக்குத்தெரிந்த உண்மை விளக்கம்இதுவே என்ற முடிவுரையுடன் கேசட் முடிகிறது.
சன் டிவியை பார்த்துவிட்டு ஜெயா டிவியைப் பார்த்தாலோ அல்லது ஜெயா டிவியைபார்த்துவிட்டு சன் டிவியை பார்த்தாலோ மண்டை குழம்பி விடுகிறது.