For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. ம-னு-வைத் தள்-ளு-படி செய்-த 3வது தேர்-தல் அதி-க-ாரியும் மாற்-றம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஜெயலலிதா சட்டசபைத் தேர்தலின்போது தாக்கல் செய்த வேட்பு மனுவைத் தள்ளுபடி செய்த புவனகிரிதொகுதி தேர்தல் அதிகாரி சந்தானம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.சட்டசபைத் தேர்தலின்போது ஜெயலலிதா 4 தொகுதிகளில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.புதுக்கோட்டை, புவனகிரி, ஆண்டிப்பட்டி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய தொகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல்செய்தார்.ஆனால், ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற காரணத்தினால் அவரது 4 மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.இந் நிலையில் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிடாமலேயே அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப்பிடித்தது. இதையடுத்து ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்தது.ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் அவரது வேட்பு மனுக்களைத் தள்ளுபடி செய்த தேர்தல் அதிகாரிகள் பழிவாங்கப்படுவார்கள் என்று கருதப்பட்டது.அதன்படியே இதுவரை 2 தேர்தல் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வேலைஏதும் தரப்படாமல் வைக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மற்றும் ஆண்டிப்பட்டி தேர்தல் அதிகாரிகள் பணியிடம்குறிப்பிடப்படாமல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இருவரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந் நிலையில் புவனகிரி தேர்தல் அதிகாரி சந்தானம்இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் எந்தப் பணியிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார் என்று குறிப்பிடப்படவில்லை.தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டபோது சந்தானம் கடலூர் மாவட்ட வழங்கல் அதிகாரியாக இருந்து வந்தார்.தற்போது மிஞ்சியிருப்பது கிருஷ்ணகிரி தேர்தல் அதிகாரி மட்டும் தான்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X