வெள்ளை உடையில் வந்த முஷாரப்
டெல்லி:
இந்தியப் பிரதமர் வாஜ்பாயுடன் பேச்சுவார்த்தை நடத்த டெல்லி வந்துள்ள பர்வேஸ் முஷாரப் வெள்ளைஷெர்வானி உடையணிந்து பாகிஸ்தானில் இருந்து வந்திறங்கினார்.
ராணுவ ஆட்சியாளராகவும் இருப்பதால் அவர் ராணுவ உடையில் வந்திறங்கவும் வாய்ப்புள்ளது எனக்கருதப்பட்டது. அப்படிப்பட்ட நிலையில் இந்திய முப்படை வீரர்கள் அவருக்கு அணி வகுப்பு நடத்துவதில்தர்மசங்கடம் ஏற்பட்டிருக்கும்.
ஆனால், ஷெர்வானி அணிந்து அதிலும் வெள்ளை நிறத்தில் உடை அணிந்து வந்ததன் மூலம் இந்தியாவின்தர்மசங்கடத்தை தவிர்த்தார் முஷாரப்.
அவருடன் 19 பேர் கொண்ட உயர் மட்டக் குழுவும் இந்தியா வந்துள்ளது.
இன்று பிற்பகலில் முஷாரப் தனது மூதாதையர்களின் வீடான நெகர் ஹவேலிக்குச் செல்வார். டெல்லியில்தர்யாகஞ்ச் பகுதியில் உள்ள இந்த வீட்டில் தான் 1943ம் ஆண்டு முஷாரப் பிறந்தார். 4 வயது வரை அவர் இங்குதான் வளர்ந்தார்.
1947ல் இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிந்தபோது அவரது குடும்பம் பாகிஸ்தானுக்குக் குடி பெயர்ந்தது.