ஸ்டாலின் வீட்டு பெண்களிடம் போலீஸ் அத்துமீறல்: 3 நீதிபதிகள் விசாரிப்பர்
சென்னை:
மேம்பால ஊழல் வழக்குத் தொடர்பாக சென்னை மேயர் ஸ்டாலினை கைது செய்ய நள்ளிரவில் நுழைந்த போலீசார்அவரது குடும்பத்தாரிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகக் கூறப்படுவது குறித்து 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்விசாரிக்க உள்ளது.
இது தொடர்பாக மனித உரிமைக் கமிஷனிடம் ஸ்டாலின் புகார் கொடுத்திருந்தார். அதில் நான் வீட்டில் இல்லாதஅந்த நள்ளிரவில் வீட்டில் புகுந்த போலீசார் என் வீட்டுப் பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்டனர் என்றுகூறியிருந்தார்.
இதை கமிஷனின் தலைவர் நீதிபதி நைனார் சுந்தரம் விசாரித்தார்.
அவர் பிறப்பித்துள்ள ஆணையில், ஸ்டாலின் புகார் குறித்து மனித உரிமைக் கமிஷனின் பெஞ்ச் இது குறித்துவிசாரிக்கும். நீதிபதி சுவாமிதுரை, நிதிபதி சம்பந்தம், டாக்டர் ஷீலா ராஜ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்தவழக்கை விசாரிக்கும்.
ஸ்டாலினின் புகார் குறித்து உள்துறைச் செயலாளர் நரேஷ் குப்தா, டி.ஜி.பி. ரவீந்திரநாத் ஆகியோர் விளக்கம்அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications