முஷாரபுக்கு வாஜ்பாய் விருந்து
டெல்லி:
இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரபுக்கு பிரதமர் வாஜ்பாய் சனிக்கிழமை சிறப்பு பகல்விருந்தளித்தார்.
டெல்லியில் தாஜ் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வழங்கப்பட்ட இந்த சிறப்பு விருந்தில் முஷாரபின் மனைவி ஷெபா,அந் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் சத்தார், இந்தியாவூக்கான பாகிஸ்தான் தூதர், இந்திய வெளியுறவு மற்றும்பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், உள்துறை அமைச்சர் அத்வானி, வெளியுறவுத்துறைச் செயலாளர்கோகிலா ஐயர், நடிகர்கள் அமிதாப்பச்சன், ஷாரூக் கான், நடிகை ஷபனா ஆஸ்மி உள்பட 150 பேர் கலந்துகொண்டனர்.
மாலையில் பாகிஸ்தான் தூதரகத்தில் அந் நாட்டு தூதர் முஷாரபுக்கு விருந்தளிப்பார். இந்த விருந்தில் காஷ்மீர்பிரிவினைவாத அமைப்பான ஹூரியத் அமைப்பைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்வதால் பல இந்தியத்தலைவர்கள் இந்த விருந்து நிகழ்ச்சியை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
இரவில் ஜனாதிபதி மாளிகையில் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் முஷாரபுக்கு சிறப்பு விருந்தளிக்கிறார்.












Click it and Unblock the Notifications